நீலகிரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ”சுற்றுலா பொங்கல்”

தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

நீலகிரி, ஜனவரி 16

தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பல்வேறு காலகட்டங்களில் வரும் பண்டிகை மற்றும் முக்கிய விழாக் காலங்களின் போது சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒருகட்டமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகையில் காணும் பொங்கல் தினமான இன்று படகு இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார். மேலும், கரும்பு, பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார். இதில், நீலகிரி மாவட்ட பழங்குடியினரான கோத்தர் இன மக்கள் தங்களது பராம்பரிய நடனமாடினர். இதுதவிர தமிழர்களின் பாரம்பரிய கலையான தப்பாட்டம் ஆடி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர். இதனைச் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...