தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
நீலகிரி, ஜனவரி 16
தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பல்வேறு காலகட்டங்களில் வரும் பண்டிகை மற்றும் முக்கிய விழாக் காலங்களின் போது சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒருகட்டமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகையில் காணும் பொங்கல் தினமான இன்று படகு இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார். மேலும், கரும்பு, பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார். இதில், நீலகிரி மாவட்ட பழங்குடியினரான கோத்தர் இன மக்கள் தங்களது பராம்பரிய நடனமாடினர். இதுதவிர தமிழர்களின் பாரம்பரிய கலையான தப்பாட்டம் ஆடி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர். இதனைச் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.
தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பல்வேறு காலகட்டங்களில் வரும் பண்டிகை மற்றும் முக்கிய விழாக் காலங்களின் போது சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒருகட்டமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகையில் காணும் பொங்கல் தினமான இன்று படகு இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார். மேலும், கரும்பு, பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார். இதில், நீலகிரி மாவட்ட பழங்குடியினரான கோத்தர் இன மக்கள் தங்களது பராம்பரிய நடனமாடினர். இதுதவிர தமிழர்களின் பாரம்பரிய கலையான தப்பாட்டம் ஆடி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர். இதனைச் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.