ஆண்டாள் விவகாரம் : வைரமுத்து மற்றும் தினமணி ஆசிரியருக்கு உப்பு அனுப்பும் போராட்டம்

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மற்றும் பத்திரிக்கை (தினமணி) ஆசிரியருக்கு சூடு சொரணை வர பா.ஜ.க. சார்பில் உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 16

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மற்றும் பத்திரிக்கை (தினமணி) ஆசிரியருக்கு சூடு சொரணை வர பா.ஜ.க. சார்பில் உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



வார இதழ் ஒன்றிற்குக் கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் குறித்த கட்டுரையில் வெளியிட்ட கருத்திற்கு பல்வேறு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி உப்பு அனுப்பும் போராட்டத்தில் பாஜக வினர் ஈடுபட்டனர். 

கவிஞர் வைரமுத்து யாராவது மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்பதாக மட்டுமே கூறியிருப்பதாகவும், பொதுவாக மன்னிப்பு கேட்கவில்லை எனக் கூறி அவருக்கும், அவரது கட்டுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியருக்கும், சூடு, சொரணை வர வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாகச் சென்று தபால் நிலையத்தில் உப்பும் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, வைரமுத்து மேற்கொள் காட்டி எழுதியதாக சொல்லப்படுவது தவறு என்றும், அப்படி ஒன்றும் வெளிநாட்டவர் எழுதவில்லை என்றும் அவர்கள் கூறினர். 

கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் ஜீயர் இருக்கும் உண்ணாவிரதத்திற்கு முழு ஆதரவு பாஜக தரும் எனத் தெரிவித்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...