ஆண்டாள் விவகாரம் : வைரமுத்து மற்றும் தினமணி ஆசிரியருக்கு உப்பு அனுப்பும் போராட்டம்

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மற்றும் பத்திரிக்கை (தினமணி) ஆசிரியருக்கு சூடு சொரணை வர பா.ஜ.க. சார்பில் உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 16

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மற்றும் பத்திரிக்கை (தினமணி) ஆசிரியருக்கு சூடு சொரணை வர பா.ஜ.க. சார்பில் உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



வார இதழ் ஒன்றிற்குக் கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் குறித்த கட்டுரையில் வெளியிட்ட கருத்திற்கு பல்வேறு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி உப்பு அனுப்பும் போராட்டத்தில் பாஜக வினர் ஈடுபட்டனர். 

கவிஞர் வைரமுத்து யாராவது மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்பதாக மட்டுமே கூறியிருப்பதாகவும், பொதுவாக மன்னிப்பு கேட்கவில்லை எனக் கூறி அவருக்கும், அவரது கட்டுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியருக்கும், சூடு, சொரணை வர வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாகச் சென்று தபால் நிலையத்தில் உப்பும் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, வைரமுத்து மேற்கொள் காட்டி எழுதியதாக சொல்லப்படுவது தவறு என்றும், அப்படி ஒன்றும் வெளிநாட்டவர் எழுதவில்லை என்றும் அவர்கள் கூறினர். 

கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் ஜீயர் இருக்கும் உண்ணாவிரதத்திற்கு முழு ஆதரவு பாஜக தரும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...