ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மற்றும் பத்திரிக்கை (தினமணி) ஆசிரியருக்கு சூடு சொரணை வர பா.ஜ.க. சார்பில் உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
கோவை, ஜனவரி 16
ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மற்றும் பத்திரிக்கை (தினமணி) ஆசிரியருக்கு சூடு சொரணை வர பா.ஜ.க. சார்பில் உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

வார இதழ் ஒன்றிற்குக் கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் குறித்த கட்டுரையில் வெளியிட்ட கருத்திற்கு பல்வேறு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி உப்பு அனுப்பும் போராட்டத்தில் பாஜக வினர் ஈடுபட்டனர்.
கவிஞர் வைரமுத்து யாராவது மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்பதாக மட்டுமே கூறியிருப்பதாகவும், பொதுவாக மன்னிப்பு கேட்கவில்லை எனக் கூறி அவருக்கும், அவரது கட்டுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியருக்கும், சூடு, சொரணை வர வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாகச் சென்று தபால் நிலையத்தில் உப்பும் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, வைரமுத்து மேற்கொள் காட்டி எழுதியதாக சொல்லப்படுவது தவறு என்றும், அப்படி ஒன்றும் வெளிநாட்டவர் எழுதவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் ஜீயர் இருக்கும் உண்ணாவிரதத்திற்கு முழு ஆதரவு பாஜக தரும் எனத் தெரிவித்தார்.
ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மற்றும் பத்திரிக்கை (தினமணி) ஆசிரியருக்கு சூடு சொரணை வர பா.ஜ.க. சார்பில் உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

வார இதழ் ஒன்றிற்குக் கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் குறித்த கட்டுரையில் வெளியிட்ட கருத்திற்கு பல்வேறு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி உப்பு அனுப்பும் போராட்டத்தில் பாஜக வினர் ஈடுபட்டனர்.
கவிஞர் வைரமுத்து யாராவது மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்பதாக மட்டுமே கூறியிருப்பதாகவும், பொதுவாக மன்னிப்பு கேட்கவில்லை எனக் கூறி அவருக்கும், அவரது கட்டுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியருக்கும், சூடு, சொரணை வர வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாகச் சென்று தபால் நிலையத்தில் உப்பும் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, வைரமுத்து மேற்கொள் காட்டி எழுதியதாக சொல்லப்படுவது தவறு என்றும், அப்படி ஒன்றும் வெளிநாட்டவர் எழுதவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் ஜீயர் இருக்கும் உண்ணாவிரதத்திற்கு முழு ஆதரவு பாஜக தரும் எனத் தெரிவித்தார்.