சாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் ”சமத்துவப் பொங்கல்”

கோவையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை, ஜனவரி 16

கோவையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

வீரகேரளம் அருகேயுள்ள தோட்டத்தில் சாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 1997 ஆண்டு முதல் இன்று வரை இருபது ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் திருவிழாவின் போது ஒன்று கூடி சாதி, மதம் கடந்து பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 



இந்தப் பொங்கல் விழா நிகழ்ச்சியில் குண்டு ஆடுதல் முதல் பம்பரம், பட்டம் விடுதல், உரி அடித்தல் உட்பட பாரம்பரியம் மிக்க விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு இல்லாமல் நடைபெற்றது. மேலும், குழந்தைகளுக்குப் பட்டம் செய்வது முதல் பறக்கவிடுவது வரை சொல்லி கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தாங்கள் வர முடியவில்லை என்றாலும் கூட தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களை அனுப்பி நண்பர்களின் குழந்தைகளோடு, குழந்தையாக விளையாடி மகிழ்ந்தனர். சொந்தகாரர்களுக்கு அழைப்பு இல்லாமல் நண்பர்களின் குடும்பம் மட்டுமே இணைந்து சமத்துவ பொங்கலை இனிமையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

சாதிய கொலைகள் பல அரங்கேறி வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் இந்த சமத்துவப் பொங்கல் விழா அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...