கோவையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை, ஜனவரி 16
கோவையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வீரகேரளம் அருகேயுள்ள தோட்டத்தில் சாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 1997 ஆண்டு முதல் இன்று வரை இருபது ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் திருவிழாவின் போது ஒன்று கூடி சாதி, மதம் கடந்து பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்தப் பொங்கல் விழா நிகழ்ச்சியில் குண்டு ஆடுதல் முதல் பம்பரம், பட்டம் விடுதல், உரி அடித்தல் உட்பட பாரம்பரியம் மிக்க விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு இல்லாமல் நடைபெற்றது. மேலும், குழந்தைகளுக்குப் பட்டம் செய்வது முதல் பறக்கவிடுவது வரை சொல்லி கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தாங்கள் வர முடியவில்லை என்றாலும் கூட தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களை அனுப்பி நண்பர்களின் குழந்தைகளோடு, குழந்தையாக விளையாடி மகிழ்ந்தனர். சொந்தகாரர்களுக்கு அழைப்பு இல்லாமல் நண்பர்களின் குடும்பம் மட்டுமே இணைந்து சமத்துவ பொங்கலை இனிமையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சாதிய கொலைகள் பல அரங்கேறி வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் இந்த சமத்துவப் பொங்கல் விழா அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வீரகேரளம் அருகேயுள்ள தோட்டத்தில் சாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 1997 ஆண்டு முதல் இன்று வரை இருபது ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் திருவிழாவின் போது ஒன்று கூடி சாதி, மதம் கடந்து பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்தப் பொங்கல் விழா நிகழ்ச்சியில் குண்டு ஆடுதல் முதல் பம்பரம், பட்டம் விடுதல், உரி அடித்தல் உட்பட பாரம்பரியம் மிக்க விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு இல்லாமல் நடைபெற்றது. மேலும், குழந்தைகளுக்குப் பட்டம் செய்வது முதல் பறக்கவிடுவது வரை சொல்லி கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தாங்கள் வர முடியவில்லை என்றாலும் கூட தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களை அனுப்பி நண்பர்களின் குழந்தைகளோடு, குழந்தையாக விளையாடி மகிழ்ந்தனர். சொந்தகாரர்களுக்கு அழைப்பு இல்லாமல் நண்பர்களின் குடும்பம் மட்டுமே இணைந்து சமத்துவ பொங்கலை இனிமையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சாதிய கொலைகள் பல அரங்கேறி வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் இந்த சமத்துவப் பொங்கல் விழா அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.