நீலகிரி, ஜனவரி 16
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நேற்று (ஜன.,15) ராணுவ தினம் கொண்டாடப்பட்டது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்பு 1948 ஜனவரி 15ம் தேதி ராணுவ தளபதி பொறுப்பு ஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்டு இந்தியாவின் தளபதி லெப்டினன் ஜெனரல் (மறைந்த பீல்டு மார்ஷல்) கே.எம். கரியப்பா பதவி ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவரவிக்கும் வகையில் நேற்று வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போர் நினைவு தூணில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும், மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.