நீலகிரிக்குட்பட்ட சாண்டிநல்லா, காமராஜசாகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

நீலகிரியில், செம்மறி ஆடுகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சாண்டிநல்லா, காமராஜசாகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, ஜனவரி 15

நீலகிரியில், செம்மறி ஆடுகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சாண்டிநல்லா, காமராஜசாகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி செம்மறி ஆடு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படும் இனமாகும். நீலகிரி மலைப் பகுதிகளில் இனப்பெருக்கம் ஆனவை. மேலும், இவை அவற்றிலிருந்து கிடைக்கும் தரமான கம்பளிக்காக அறியப்படுகின்றன.

செம்மறி ஆடுகள் மேய்ச்சல் மட்டுமே அவற்றின் வாழ்வின் முக்கிய அம்சமாகும். நீலகிரி மாவட்டத்தில் குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்களால், இந்த அரிய ஆடு இனம் அழிவின் விளிம்பை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இந்த ஆடுகளை அழிவிலிருந்து காக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உதகை அருகேயுள்ள சாண்டிநல்லா பகுதியில் ஆடு இனவிருத்தி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. 50 ஆண்டுகள் கடந்த இந்த ஆய்வு மையத்தில் நீலகிரி செம்மறி ஆடுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வு மையம் அமைந்துள்ள வென்லாக் டவுன்ஸ் பகுதியில் 1200 ஏக்கர் மேய்ச்சல் நிலம் இருந்தது. தற்போது அது 700 ஏக்கராகக் குறைந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆய்வு மையத்தில் சுமார் 1200 செம்மறி ஆடுகள் உள்ளன. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதால், நீலகிரி செம்மறி ஆடுகள் அழிவின் விளம்பில் உள்ளன.

இந்நிலையில், வென்லாக் டவுன்ஸ் பகுதியில் மின்வாரியத்துக்குச் சொந்தமான இடம் காமராஜ் சாகர் அணையை ஒட்டியுள்ளது. இந்த இடம் பல ஆண்டுகளாக சுற்றுலா தலமாக இருந்து வந்தது. மேலும், இப்பகுதியில் சிலர் குதிரைகளையும் சவாரிக்கு பயன்படுத்தி வந்தனர். 

இதனிடையே, இந்த குதிரைகள் மூலம் செம்மறி ஆடுகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இப்பகுதியில் குதிரை சவாரி மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆடு இனவிருத்தி ஆய்வு மைய தலைவர் பேராசிரியர் ஆர். அனில்குமார் கூறுகையில், '9-வது மைல் சூட்டிங் மட்டம் பகுதியில் குதிரைகள் சவாரிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், இப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்ட செம்மறி ஆடுகளுக்கு ஃபுட் ராட் மற்றும் இதர நோய் தாக்குதல் ஏற்பட்டன. இதுகுறித்து ஆய்வு செய்த போது, மேய்ச்சல் நிலத்தில் குதிரைகள் கால்களால் புல்தரையை தோண்டி, அந்த குழிகளில் மழை நீர் நிரம்பி தொற்று நோய் கிருமிகள் உற்பத்தியாகியுள்ளது தெரியவந்தது. இதன் மூலம் அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் ஆடுகளுக்கு நோய் தொற்று பரவியுள்ளது. 

இதனால், அப்பகுதியில் குதிரைகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...