நீலகிரிக்குட்பட்ட சாண்டிநல்லா, காமராஜசாகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

நீலகிரியில், செம்மறி ஆடுகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சாண்டிநல்லா, காமராஜசாகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, ஜனவரி 15

நீலகிரியில், செம்மறி ஆடுகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சாண்டிநல்லா, காமராஜசாகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி செம்மறி ஆடு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படும் இனமாகும். நீலகிரி மலைப் பகுதிகளில் இனப்பெருக்கம் ஆனவை. மேலும், இவை அவற்றிலிருந்து கிடைக்கும் தரமான கம்பளிக்காக அறியப்படுகின்றன.

செம்மறி ஆடுகள் மேய்ச்சல் மட்டுமே அவற்றின் வாழ்வின் முக்கிய அம்சமாகும். நீலகிரி மாவட்டத்தில் குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்களால், இந்த அரிய ஆடு இனம் அழிவின் விளிம்பை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இந்த ஆடுகளை அழிவிலிருந்து காக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உதகை அருகேயுள்ள சாண்டிநல்லா பகுதியில் ஆடு இனவிருத்தி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. 50 ஆண்டுகள் கடந்த இந்த ஆய்வு மையத்தில் நீலகிரி செம்மறி ஆடுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வு மையம் அமைந்துள்ள வென்லாக் டவுன்ஸ் பகுதியில் 1200 ஏக்கர் மேய்ச்சல் நிலம் இருந்தது. தற்போது அது 700 ஏக்கராகக் குறைந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆய்வு மையத்தில் சுமார் 1200 செம்மறி ஆடுகள் உள்ளன. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதால், நீலகிரி செம்மறி ஆடுகள் அழிவின் விளம்பில் உள்ளன.

இந்நிலையில், வென்லாக் டவுன்ஸ் பகுதியில் மின்வாரியத்துக்குச் சொந்தமான இடம் காமராஜ் சாகர் அணையை ஒட்டியுள்ளது. இந்த இடம் பல ஆண்டுகளாக சுற்றுலா தலமாக இருந்து வந்தது. மேலும், இப்பகுதியில் சிலர் குதிரைகளையும் சவாரிக்கு பயன்படுத்தி வந்தனர். 

இதனிடையே, இந்த குதிரைகள் மூலம் செம்மறி ஆடுகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இப்பகுதியில் குதிரை சவாரி மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆடு இனவிருத்தி ஆய்வு மைய தலைவர் பேராசிரியர் ஆர். அனில்குமார் கூறுகையில், '9-வது மைல் சூட்டிங் மட்டம் பகுதியில் குதிரைகள் சவாரிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், இப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்ட செம்மறி ஆடுகளுக்கு ஃபுட் ராட் மற்றும் இதர நோய் தாக்குதல் ஏற்பட்டன. இதுகுறித்து ஆய்வு செய்த போது, மேய்ச்சல் நிலத்தில் குதிரைகள் கால்களால் புல்தரையை தோண்டி, அந்த குழிகளில் மழை நீர் நிரம்பி தொற்று நோய் கிருமிகள் உற்பத்தியாகியுள்ளது தெரியவந்தது. இதன் மூலம் அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் ஆடுகளுக்கு நோய் தொற்று பரவியுள்ளது. 

இதனால், அப்பகுதியில் குதிரைகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...