சிறுவனின் வயிற்றில் துணியை வைத்து ஆபரேசன் செய்த மருத்துவர்கள் : நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார்

கோவையில் சிறுவனின் வயிற்றில் துணியை வைத்து அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

கோவை, ஜனவரி 13 

கோவையில் சிறுவனின் வயிற்றில் துணியை வைத்து அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். 



திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மகன் விஷ்ணு (4). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் காய்ச்சல் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இடதுபுற சிறுநீரகம் சராசரி அளவை விட சிறியதாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறினர். 

இதனைத்தொடர்ந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் சிறுவன் கடும் வாயிற்று வலியால் அவதியுற்று வந்தார். .இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் தந்தை, அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, வயிற்றுப் பகுதியில் ஒரு துணி மற்றும் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட பஞ்சு இருந்தது தெரியவந்தது. 

இதனால், அதிர்ச்சியடைந்த வினோத்குமார் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு துணி மற்றும் பஞ்சினை அகற்றுமாறு கோரியதன் பேரில், அவற்றை மீண்டும் அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் மருத்துவர்கள் அகற்றினர். 

இந்த நிலையில், தன் மகனுக்கு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களான தர்மேந்திரா, வினோத் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், அந்த மனுவில் இதுபோன்ற மருத்துவர்களை தண்டித்து, குழந்தைகள் வாழ்வில் விளையாடா வண்ணம் செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...