கர்நாடகாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்: தமிழகம் வரும் வாகனங்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து அடித்த பிறகே அனுமதி

ஊட்டி, ஜனவரி 13

கர்நாடகாவில் பறவை காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால், கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றது. 

கர்நாடகாவில் தற்போது பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து சோதனை சாவடிகளிலும் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.



அதன்படி, கர்நாடகா மாநிலம் மைசூர், பெங்களூர் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் கக்கநள்ளா சோதனை சாவடி வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும், தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கர்நாடகாவில் இருந்து கோழி உட்பட பறவைகளை கொண்டு வர தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...