கர்நாடகாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்: தமிழகம் வரும் வாகனங்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து அடித்த பிறகே அனுமதி

ஊட்டி, ஜனவரி 13

கர்நாடகாவில் பறவை காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால், கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றது. 

கர்நாடகாவில் தற்போது பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து சோதனை சாவடிகளிலும் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.



அதன்படி, கர்நாடகா மாநிலம் மைசூர், பெங்களூர் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் கக்கநள்ளா சோதனை சாவடி வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும், தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கர்நாடகாவில் இருந்து கோழி உட்பட பறவைகளை கொண்டு வர தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...