ஊட்டி, ஜனவரி 13
கர்நாடகாவில் பறவை காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால், கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றது.
கர்நாடகாவில் தற்போது பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து சோதனை சாவடிகளிலும் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, கர்நாடகா மாநிலம் மைசூர், பெங்களூர் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் கக்கநள்ளா சோதனை சாவடி வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும், தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கர்நாடகாவில் இருந்து கோழி உட்பட பறவைகளை கொண்டு வர தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் பறவை காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால், கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றது.
கர்நாடகாவில் தற்போது பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து சோதனை சாவடிகளிலும் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, கர்நாடகா மாநிலம் மைசூர், பெங்களூர் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் கக்கநள்ளா சோதனை சாவடி வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும், தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கர்நாடகாவில் இருந்து கோழி உட்பட பறவைகளை கொண்டு வர தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.