ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துக்கு எதிராக கோவையில் வைணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை, ஜனவரி 13
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துக்கு எதிராக கோவையில் வைணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரியகடை வீதியில உள்ள வேணுகோபால் சாமி கோவில் முன்பாக ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி இன்று காலை வைணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனி மடத்தின் 24 வது பட்ட சடகோப ராமனுஜ ஜீயர் கலந்து கொண்டார். கோவில் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் வைணவர்களும், ஆண்டாள் பக்தர்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேட்டியளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், கவிஞர் வைரமுத்து வரும் செவ்வாய் கிழமைக்குள் மன்னிப்பு கேட்கவில்லை எனில் புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்தார். மேலும் செவ்வாய்கிழமைக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு வந்து கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், உலகம் முழுவதும் உள்ள இந்துகள் சேர்ந்து குரல் கொடுத்து கவிஞர் வைரமுத்துவை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரவைப்போம் எனவும் ஜீயர் தெரிவித்தார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநில செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பங்கேற்றனர்.
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துக்கு எதிராக கோவையில் வைணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரியகடை வீதியில உள்ள வேணுகோபால் சாமி கோவில் முன்பாக ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி இன்று காலை வைணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனி மடத்தின் 24 வது பட்ட சடகோப ராமனுஜ ஜீயர் கலந்து கொண்டார். கோவில் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் வைணவர்களும், ஆண்டாள் பக்தர்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேட்டியளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், கவிஞர் வைரமுத்து வரும் செவ்வாய் கிழமைக்குள் மன்னிப்பு கேட்கவில்லை எனில் புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்தார். மேலும் செவ்வாய்கிழமைக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு வந்து கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், உலகம் முழுவதும் உள்ள இந்துகள் சேர்ந்து குரல் கொடுத்து கவிஞர் வைரமுத்துவை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரவைப்போம் எனவும் ஜீயர் தெரிவித்தார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநில செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பங்கேற்றனர்.