ஆண்டாள் சர்ச்சை கருத்து விவகாரம் : வைரமுத்துக்கு எதிராக வைணவர்கள் போராட்டம்

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துக்கு எதிராக கோவையில் வைணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை, ஜனவரி 13

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துக்கு எதிராக கோவையில் வைணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



பெரியகடை வீதியில உள்ள வேணுகோபால் சாமி கோவில் முன்பாக  ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக   கூறி இன்று காலை  வைணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனி மடத்தின் 24 வது பட்ட  சடகோப ராமனுஜ ஜீயர் கலந்து கொண்டார். கோவில் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில கண்டன ஆர்ப்பாட்டத்தில்  50-க்கும் மேற்பட்டோர் வைணவர்களும், ஆண்டாள் பக்தர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்  போது பேட்டியளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், கவிஞர் வைரமுத்து வரும் செவ்வாய் கிழமைக்குள் மன்னிப்பு கேட்கவில்லை எனில் புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக  தெரிவித்தார். மேலும் செவ்வாய்கிழமைக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு வந்து கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், உலகம் முழுவதும் உள்ள இந்துகள் சேர்ந்து குரல் கொடுத்து கவிஞர் வைரமுத்துவை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரவைப்போம் எனவும் ஜீயர் தெரிவித்தார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநில செயலாளர் வானதி சீனிவாசன்  உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பங்கேற்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...