கோவை மாநகர போலீசாருக்கு ”பாடி ஒன் கேமிரா” வழங்கத் திட்டம்: போக்குவரத்து துணை ஆணையர்

தேவைப்பட்டால் ”பாடி ஒன் கேமிரா” கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்படும் என கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 13

தேவைப்பட்டால் ”பாடி ஒன் கேமிரா” கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்படும் என கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களைப் பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிப்பது போலீசாரின் வழக்கமான பணி. அவ்வாறு அதிக தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய சூழலில், ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசாரின் கைகளில் லஞ்சமாகத் திணித்து 'எஸ்கேப்' ஆவதும் சிலரின் வழக்கமான குணம் தான். இந்த சூழலில், போலீசார் லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியின் போது போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தும் மர்ம நபர்களை அடையாளம் காணவும் கேரள மாநில போலீசாருக்கு 'பாடி ஒன் கேமிரா' (Body Worn Camera) வழங்கப்பட்டது.

அளவில் சிறியதாக இருக்கும் இந்தக் கேமிரா போலீசாரின் சீருடையில் பொருத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், பதிவாகும் காட்சிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு அனுப்பப்படும். அந்தந்தக் காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவிறக்கம் செய்யாமல் கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசாரால் அழிக்க முடியாது. போலீசாரை கண்காணிக்கும் இந்தத் திட்டம் கேரள மாநிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

தமிழகத்திலும் இதுபோன்ற கேமிராக்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், மாநிலத்தின் 12 மாநகராட்சிகளுக்கு 'டிரையல்' அடிப்படையில் 'பாடி ஒன் கேமிரா'க்கள் வழங்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் இந்த கேமிராக்கள் உபயோகிக்கப்படாத நிலையில் நெல்லை மாவட்ட போலீசார் 'பாடி ஒன் கேமிரா'வை உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர். 

கோவை மாநகர போலீசாருக்கும் இந்த கேமிராக்கள் வழங்கப்படுமா? என்ற கேள்வியை மாநகர காவல்துறையிடம் முன்வைக்கப்பட்டது.



இதற்கு பதிலளித்து கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறுகையில், "கோவையில் இதுபோன்ற ஒரு கேமிரா உள்ளது. அந்த கேமிரா தற்போது 'டிரையல்'லில் (Trial) உள்ளது. இந்த கேமிரா தேவை என்றால் 'பாடி ஒன் கேமிரா' வரவழைக்கப்பட்டு மாநகரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும்" என்றார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...