உறியடிப்போட்டியில் பங்கேற்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய முதலமைச்சர் பழனிசாமி

பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை விமான நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உறியடி போட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.


கோவை, ஜனவரி 12

பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை விமான நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உறியடி போட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.



சென்னையில் இருந்து சேலம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவரை, விமான நிலையத்தில் நாதஸ்வரம், மத்தளம் வாத்தியங்களுடன் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  தமிழக மக்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.  தொடர்ந்து, வரும் 16-ம் தேதி நீலகரி வரும் டிடிவி தினகரன் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பொங்கல் விழா தருணத்தில் நல்லவர்கள் பற்றியும், நல்லதைப் பற்றி மட்டும் சிந்திப்போம், என்றார். 

மேலும், சிவகாசி பட்டாசு தொழில் பிரச்சினை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியுள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார். சிவகாசி பட்டாசு தொழில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 22ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருவதாகவும், தீர்ப்பு வந்த பின்னர், மூத்த வழக்கறிஞர்கள் கொண்டு தமிழக அரசு வழக்கை நடத்தி பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். 

அங்கிருந்து கிளம்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை சர்வதேச விமான நிலையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவை குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர், உறியடித்து அங்கு கூடியிருந்த மக்களை அவர் உற்சாகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த அவர், சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டுச் சென்றார்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...