தவறவிட்டவரிடம் பணப் பையை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸுக்கு பாராட்டு

உதகையில் பணப் பையை தவறவிட்டவரிடம், அதனை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸ் அதிகாரிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா பாராட்டினார்.

உதகை, ஜனவரி 12

உதகையில் பணப் பையை தவறவிட்டவரிடம், அதனை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸ் அதிகாரிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா பாராட்டினார். 

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலன். இவர், உதகையில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் உதகை சென்றுள்ளார். அப்போது, அவரிடம் இருந்த பணப் பை கீழே விழுந்ததை அறியாமல் சென்றுவிட்டார். அப்போது, பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிலிப், அவ்வழியே வந்த போது அந்தப் பையைக் கண்டுள்ளார். 

பின்னர், போக்குவரத்து புறக்காவல் நிலையத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பாலனை தொடர்பு கொண்டு, உரிய விசாரணைக்குப் பிறகு, பணப் பை ஒப்படைக்கப்பட்டது. போலீஸாரின் இந்த நன்னடத்தையைப் பாராட்டிய மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார். 

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...