உதகையில் பணப் பையை தவறவிட்டவரிடம், அதனை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸ் அதிகாரிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா பாராட்டினார்.
உதகை, ஜனவரி 12
உதகையில் பணப் பையை தவறவிட்டவரிடம், அதனை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸ் அதிகாரிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா பாராட்டினார்.
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலன். இவர், உதகையில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் உதகை சென்றுள்ளார். அப்போது, அவரிடம் இருந்த பணப் பை கீழே விழுந்ததை அறியாமல் சென்றுவிட்டார். அப்போது, பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிலிப், அவ்வழியே வந்த போது அந்தப் பையைக் கண்டுள்ளார்.
பின்னர், போக்குவரத்து புறக்காவல் நிலையத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பாலனை தொடர்பு கொண்டு, உரிய விசாரணைக்குப் பிறகு, பணப் பை ஒப்படைக்கப்பட்டது. போலீஸாரின் இந்த நன்னடத்தையைப் பாராட்டிய மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார்.
உதகையில் பணப் பையை தவறவிட்டவரிடம், அதனை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸ் அதிகாரிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா பாராட்டினார்.
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலன். இவர், உதகையில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் உதகை சென்றுள்ளார். அப்போது, அவரிடம் இருந்த பணப் பை கீழே விழுந்ததை அறியாமல் சென்றுவிட்டார். அப்போது, பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிலிப், அவ்வழியே வந்த போது அந்தப் பையைக் கண்டுள்ளார்.
பின்னர், போக்குவரத்து புறக்காவல் நிலையத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பாலனை தொடர்பு கொண்டு, உரிய விசாரணைக்குப் பிறகு, பணப் பை ஒப்படைக்கப்பட்டது. போலீஸாரின் இந்த நன்னடத்தையைப் பாராட்டிய மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார்.