மாணவர் தற்கொலை விவகாரம்: ஆசிரியரிடம் முறையாக விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை

கோவை, ஜனவரி 12

கோவையில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் முறையாக விசாரணை நடத்தக்கோரி உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். 



ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஷமீம். இவரது மகன் ஜாபர் ஜெரின் (15). இவர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல நேற்று காலை பள்ளிக்குச் சென்ற ஜாபர் ஜெரின் மதியம் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவரை பள்ளியின் உதவியாளர் ஒருவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஜாபரை வீட்டுக்கு அழைத்து வந்த உதவியாளரிடம் பள்ளியில் என்ன நடந்தது? என்ற விவரத்தை மாணவரின் பெற்றோர் விசாரித்துள்ளனர். அதற்கு பள்ளி தலைமையாசிரியரை வந்து சந்திக்கும்படி பள்ளி உதவியாளர் கூறியதாக தெரிகிறது. இந்த இடைவெளியில் வீட்டிற்குள் புகுந்த ஜாபர், கதவை தாழிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த ரத்தினபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஜாபரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், மாணவர் பள்ளியில் இருந்து எதற்காக திருப்பி அனுப்பப்பட்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய ஜாபரின் உறவினர்கள் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையரிடம் இதுகுறித்த மனுவினையும் அளித்தனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...