பொங்கல் பண்டிகைக்கு கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கக் கோரி பெற்றோர்கள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ள பொங்கல் பண்டிகையின் போது மாநில கல்வி வாரியம் அளிக்கும் விடுமுறைகளைப் போலவே கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை, ஜனவரி 12

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ள பொங்கல் பண்டிகையின் போது மாநில கல்வி வாரியம் அளிக்கும் விடுமுறைகளைப் போலவே கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் சார்பில் 46 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் கேந்திரிய பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழுந்தைகளுக்கு இந்த பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்பட்டு சேர்க்கப்படுகின்றனர். 

கோவையில், சவுரிபாளையம் மற்றும் சூலூர் ஆகிய இரண்டு இடங்களில் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளானது செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 45 கேந்தரிய பள்ளிகளுக்கு ஜனவரி 15-ம் தேதி மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

மாநில கல்வி வாரியம் அறிவித்துள்ளதைப் போல பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை மத்திய கல்வி வாரியத்திற்கு உட்பட்ட தமிழக பள்ளிகளுக்கும் அளிக்க வேண்டும் என கேந்தரிய வித்யாலயா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்துகொள்ள குழந்தைகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தமிழகத்திற்கு சம்மந்தமில்லாத குருகோவிந்சிங் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி, ஜென்மாஸ்டமி, குரு நானக் பிறந்த நாள், கோவர்தன் பூஜா, புத்த பூர்ணிமா போன்ற தமிழகத்திற்கு சம்பந்தமில்லாத நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவதைத் தவிர்த்து பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் தசரா பண்டிகை, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதைப் போல பொங்கல் விழாவையும் கொண்டாட வேண்டும் எனவும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...