ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு

விலை உயர்ந்துவிட்டதால் ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்க முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ஜனவரி 12

விலை உயர்ந்துவிட்டதால் ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்க முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பள்ளிப்பட்டு, கானகம் ஆகிய இடங்களில் புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்றார். மேலும், ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர வேண்டும் என வலியுறுத்தினர். 

எதிர்கட்சி எம்எல்ஏவின் இந்தக் கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் 1 கோடியே 52 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. இப்போது, 1 கோடியே 95 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை அப்போது வெளி மார்க்கெட்டில் குறைவாக இருந்தது.

ஆனால், இப்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மத்திய அரசு மானியமும் இப்போது நிறுத்தி விட்டனர். எனவே, ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு விநியோகம் செய்ய இயலாது. துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. மானியத்தை ஈடுகட்ட அரசுக்கு மாதத்திற்கு ரூ.207 கோடி செலவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...