ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு

விலை உயர்ந்துவிட்டதால் ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்க முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ஜனவரி 12

விலை உயர்ந்துவிட்டதால் ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்க முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பள்ளிப்பட்டு, கானகம் ஆகிய இடங்களில் புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்றார். மேலும், ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர வேண்டும் என வலியுறுத்தினர். 

எதிர்கட்சி எம்எல்ஏவின் இந்தக் கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் 1 கோடியே 52 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. இப்போது, 1 கோடியே 95 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை அப்போது வெளி மார்க்கெட்டில் குறைவாக இருந்தது.

ஆனால், இப்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மத்திய அரசு மானியமும் இப்போது நிறுத்தி விட்டனர். எனவே, ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு விநியோகம் செய்ய இயலாது. துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. மானியத்தை ஈடுகட்ட அரசுக்கு மாதத்திற்கு ரூ.207 கோடி செலவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...