தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தித் திட்டத்தில் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை, ஜனவரி 11
தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தித் திட்டத்தில் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐடிஐ (NCVT மற்றும் SCVT) தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். 10-ம் வகுப்பு மற்றும் தொழிற்பள்ளியில் பயின்று தேர்ச்சி/ தோல்வி அடைந்தவர்கள் மூன்று மாத அடிப்படைப் பயிற்சியுடன் தொழிற்சாலைகளில்வ பயிற்சி பெற்று நேரடியாகத் தேசிய தொழிற்பழகுநர் சான்று பெறலாம்.
தொழிற்பிரிவிற்கு ஏற்றவாறு ரூ. 7,500 முதல் ரூ.16,000 வரை மாத உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அரசு 25 சதவீதம் உதவித்தொகையை நிறுவனங்களுக்குத் திரும்ப வழங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் இப்பயிற்சியைப் பெற்று பயனடையுமாறு கோவை அரசினர் தொடர் அறிவுரை மையத்தின் உதவி இயக்குநர் அறிவித்துள்ளார்.
தேசிய தொழிற்பழகுநர் அபிவிருத்தித் திட்டத்தில் தொழிற்சாலைகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐடிஐ (NCVT மற்றும் SCVT) தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். 10-ம் வகுப்பு மற்றும் தொழிற்பள்ளியில் பயின்று தேர்ச்சி/ தோல்வி அடைந்தவர்கள் மூன்று மாத அடிப்படைப் பயிற்சியுடன் தொழிற்சாலைகளில்வ பயிற்சி பெற்று நேரடியாகத் தேசிய தொழிற்பழகுநர் சான்று பெறலாம்.
தொழிற்பிரிவிற்கு ஏற்றவாறு ரூ. 7,500 முதல் ரூ.16,000 வரை மாத உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அரசு 25 சதவீதம் உதவித்தொகையை நிறுவனங்களுக்குத் திரும்ப வழங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் இப்பயிற்சியைப் பெற்று பயனடையுமாறு கோவை அரசினர் தொடர் அறிவுரை மையத்தின் உதவி இயக்குநர் அறிவித்துள்ளார்.