திருமண ஆசைகாட்டி ஆண்களை ஏமாற்றிய பெண் கோவையில் கைது

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த பெண் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 11

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த பெண் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் (27) என்ற மென்பொருள் பொறியாளர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். திருமணம் செய்து கொள்வதற்காக இணையத்தில் பதிவு செய்திருந்த அவரை கோவையைச் சேர்ந்த சுருதி (21) என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்.

அவர், தனது தந்தை துபாயில் தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகி உள்ளார். அலைபேசியில் காதல் வளர்த்த பாலமுருகன் இந்தியா வந்த போது அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது பல லட்சம் ரூபாயை பாலமுருகனிடம் பெற்றுக்கொண்ட சுருதி பின்னர் அவரிடம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த பாலமுருகன், சுருதி மீது கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது சுருதியின் உண்மையான பெயர் மைதிலி என்பதும் போலியான குடும்ப உறுப்பினர்களைக் காட்டி இது போல் பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

மேலும், இதேப் போல் திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமான பெண் ஒருவர் தம்மிடம் 43 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக நாமக்கல்லைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற மென்பொருள் ஊழியரும் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சுருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38) ஆகிய மூவரையும் கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சுருதி பலரிடம் இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதும், தனது பெயர்களையும் தனது குடும்பத்தினர் எனக் கூறுபவர்களின் பெயர்களையும் மாற்றிக் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான அதே கண்கள் என்ற திரைப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளை பெண் ஒருவர் ஏமாற்றுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதேப் போல் தற்போது பெண் ஒருவர் திருமண தகவல் இணையதளங்கள் மூலம் அறிமுகமாகி பல லட்சம் மோசடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சுருதி ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளதும் அந்த படம் இதுவரை வெளியாகாததும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...