கோவையில் மூதாட்டியைக் கொலை செய்து​ 17 பவுன் நகை கொள்ளை

கோவை, செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொலை செய்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 17 பவுன் நகையையும் கொள்ளையடித்துச் சென்றனர்



கோவை, ஜனவரி 11

கோவை, செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொலை செய்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 17 பவுன் நகையையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

செல்வபுரம் தேவேந்திர வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ராமாயி அம்மாள் (75). இந்தத் தம்பதிக்கு 2 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே, சின்னசாமி இறந்து விட்டதால் ராமாயி அம்மாள் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டைத் திறந்து பார்த்தபோது ராமாயி அம்மாள் உயிரிழந்திரப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில், செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அவரது காது, மூக்கு ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டின் பீரோவில் இருந்த 17 பவுன் நகையையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...