உதகையில் முக்கிய வீதிகளில் உலா வந்த காட்டெருமையை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி, ஜனவரி 10
உதகையில் முக்கிய வீதிகளில் உலா வந்த காட்டெருமையை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில் உள்ள தொட்டபெட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிதவறி வந்த காட்டெருமை ஒன்று பல நாட்களாக தாவரவியல் பூங்கா பகுதியில் உலா வந்தது.
இந்நிலையில் இன்று இரவு தாவரவியல் பூங்கா அருகே வந்த காட்டெருமை, சேரிங்கிராஸ் வழியாக மார்க்கொட் சென்று பேருந்து நிலையம் வரை உலா வந்தது.
காட்டெருமையை கண்டு பீதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் உதகையில் இரவு நேரம் பரபரப்பு ஏற்பட்டது.