நீலகிரியில் பொதுமக்களை வாட்டி எடுக்கும் கடும் குளிர் : விடுதிகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சுற்றுலாப் பயணிகள்

உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி, ஜனவரி 10

உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டத்தில் இன்று மதியம் திடீரென லேசான மழை பெய்தது. இதனால், ஏற்பட்ட குளுமையான சீதோஷன நிலையை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், மாலை வேளையில், கடும் குளிர் வாட்டி எடுத்தது. குன்னூரில் ஜுரோ டிகிரியும், உதகையில் -1 டிகிரி அளவிற்கு கடுமையான குளிர் நிலவியது. பொதுமக்கள், சீக்கிரமாகவே வீடுகளுக்கு முடங்கினர். மேலும், கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒருசில இடங்களில், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் விறகுளை வைத்து தீ மூட்டிக் குளிர் காய்ந்தனர். 

உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள இயற்கை காட்சிகளை ரசிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குளிரின் அளவு அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...