உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி, ஜனவரி 10
உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று மதியம் திடீரென லேசான மழை பெய்தது. இதனால், ஏற்பட்ட குளுமையான சீதோஷன நிலையை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், மாலை வேளையில், கடும் குளிர் வாட்டி எடுத்தது. குன்னூரில் ஜுரோ டிகிரியும், உதகையில் -1 டிகிரி அளவிற்கு கடுமையான குளிர் நிலவியது. பொதுமக்கள், சீக்கிரமாகவே வீடுகளுக்கு முடங்கினர். மேலும், கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒருசில இடங்களில், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் விறகுளை வைத்து தீ மூட்டிக் குளிர் காய்ந்தனர்.
உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள இயற்கை காட்சிகளை ரசிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குளிரின் அளவு அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று மதியம் திடீரென லேசான மழை பெய்தது. இதனால், ஏற்பட்ட குளுமையான சீதோஷன நிலையை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், மாலை வேளையில், கடும் குளிர் வாட்டி எடுத்தது. குன்னூரில் ஜுரோ டிகிரியும், உதகையில் -1 டிகிரி அளவிற்கு கடுமையான குளிர் நிலவியது. பொதுமக்கள், சீக்கிரமாகவே வீடுகளுக்கு முடங்கினர். மேலும், கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒருசில இடங்களில், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் விறகுளை வைத்து தீ மூட்டிக் குளிர் காய்ந்தனர்.
உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள இயற்கை காட்சிகளை ரசிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குளிரின் அளவு அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.