”பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு”

நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகமாக உள்ளதாக மாதர் சங்க அகில இந்தியப் பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை, ஜனவரி 10

நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகமாக உள்ளதாக மாதர் சங்க அகில இந்தியப் பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே குற்றம்சாட்டியுள்ளார். 



அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம் கோவையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சங்கத்தின் அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே மற்றும் சுபாஷினிஅலி, உ. வாசுகி, சுதாசுந்தராமன், சுகந்தி, பாலபாரதி உள்ளிட்டு நாடு முழுவதும் இருந்து மத்தியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை சரோஜ்பவனில் இன்று நடைபெற்றது.

இதில், பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய மரியம்தாவ்லே கூறுகையில், பா.ஜ.க. அரசு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையின் காரணமாக பெரும்பாலானோர் வறுமையில் வாடி வருகின்றனர்.  மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற திட்டங்களால் அனைத்து தரப்பினரும் பாதித்தனர் என்றாலும்கூட நேரிடையாக பெண்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் உள்ளிட்ட சங்பரிவார கும்பல்களால் சிறுபான்மையினர், தலித் மக்கள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்த வன்முறைகள் அதிகரித்துள்ளது. 

முத்தலாக் முறையை தடைசெய்ய வேண்டுமென்பதில் மாதர் சங்கத்திற்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடுப்பு சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு எந்த வகையிலும் உதவாது. பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எவ்வித நிவாரணத்தையும் பெற்றுத்தராது. இச்சட்டம் இயற்ற அனைத்து தரப்பினரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், இடதுமுன்னணியின் வெற்றிக்காக மாதர் சங்கம் பிரச்சாரத்தில் ஈடுபடும். என்றார். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...