போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு : போராட்டம் நீட்டிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது


கோவை, ஜனவரி 10

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது. 

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ந்தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களின் போராட்டத்தினால் பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டு, அதனால் பொதுமக்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.  ரயில்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுபற்றிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இடைக்காலமாக 2.44 ஊதிய உயர்வு வழங்கப்படும் எனக் கூறினார்.

பொங்கல் பண்டிகை வருவதால் பொதுமக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என நீதிபதிகளும் கூறியுள்ளனர். ஆனால், அரசின் உத்தரவாதத்தினை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்து உள்ளன. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சு நடத்த அரசு விரும்புகிறதா? இல்லையா? என்றும் தொ.மு.ச. கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது. 

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...