போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு : போராட்டம் நீட்டிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது


கோவை, ஜனவரி 10

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது. 

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ந்தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களின் போராட்டத்தினால் பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டு, அதனால் பொதுமக்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.  ரயில்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுபற்றிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இடைக்காலமாக 2.44 ஊதிய உயர்வு வழங்கப்படும் எனக் கூறினார்.

பொங்கல் பண்டிகை வருவதால் பொதுமக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என நீதிபதிகளும் கூறியுள்ளனர். ஆனால், அரசின் உத்தரவாதத்தினை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்து உள்ளன. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சு நடத்த அரசு விரும்புகிறதா? இல்லையா? என்றும் தொ.மு.ச. கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது. 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...