போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது
கோவை, ஜனவரி 10
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது.
போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ந்தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களின் போராட்டத்தினால் பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டு, அதனால் பொதுமக்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். ரயில்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுபற்றிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இடைக்காலமாக 2.44 ஊதிய உயர்வு வழங்கப்படும் எனக் கூறினார்.
பொங்கல் பண்டிகை வருவதால் பொதுமக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என நீதிபதிகளும் கூறியுள்ளனர். ஆனால், அரசின் உத்தரவாதத்தினை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்து உள்ளன. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சு நடத்த அரசு விரும்புகிறதா? இல்லையா? என்றும் தொ.மு.ச. கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனால், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது.