ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்பத் தயார் : உயர்நீதிமன்றத்தில் சிஐடியு அறிவிப்பு

ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் ஒப்பந்தத்தை அரசு திரும்ப பெற்றுக் கொண்டால், பணிக்குத் திரும்ப தயாராக இருப்பதாக சிஐடியு தொழிற்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 10

ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் ஒப்பந்தத்தை அரசு திரும்ப பெற்றுக் கொண்டால், பணிக்குத் திரும்ப தயாராக இருப்பதாக சிஐடியு தொழிற்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திமுக உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். பெரும்பாலான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கி உள்ளது. தமிழக அரசும் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. 

வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, ரூ.750 கோடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், ரூ. 7,000 கோடி நிலுவைத்தொகை உள்ள நிலையில், ரூ. 750 கோடி ஏற்க முடியாது என்று கூறிய தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், வேலைநிறுத்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் அளித்த பின்னரே தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம் என்று சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் வாதாடப்பட்டது. 

அரசின் ஊதிய ஒப்பந்தத்தில் 32 தொழிற்சங்கங்கள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்திற்கு காரணம் அரசுதான், ஊழியர்கள் இல்லை என்று கூறிய சிஐடியு வழக்கறிஞர், நீடிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவதாகவே தெரிவித்தார். ஓராண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தொமுச வழக்கறிஞர் வாதிட்டார். ஊதிய உயர்வு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சிஐடியு தெரிவித்தது. 

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...