திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூபாய் 45 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர், ஜனவரி 10
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூபாய் 45 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி மாதம் வெகு விமர்சையாக திருவிழா நடத்துவது வழக்கம். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடப்பதற்கு முன்பாக எண்ணப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று (ஜன. 10) காலை கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் கோவில் உண்டியல் உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதில், கோவிலின் பின்புற சுவற்றின் மீது ஏறி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வேலால் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த சுமார் 45 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூபாய் 45 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி மாதம் வெகு விமர்சையாக திருவிழா நடத்துவது வழக்கம். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடப்பதற்கு முன்பாக எண்ணப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று (ஜன. 10) காலை கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் கோவில் உண்டியல் உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதில், கோவிலின் பின்புற சுவற்றின் மீது ஏறி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வேலால் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த சுமார் 45 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.