சகோதரியையும் அவரது மகளையும் கொன்று சகோதரர் தற்கொலை : கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதால் விபரீதம்

பண விவகாரத்தில் சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்த கொண்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரி இன்று உயிரிழந்தார்.

கோவை, ஜனவரி 10

பண விவகாரத்தில் சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்த கொண்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரி இன்று உயிரிழந்தார்.

கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (63). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் தனது சகோதரி பாக்கியம் (68) என்பவரது வீட்டில் வசித்து வந்தார். அதே வீட்டில் பாக்கியத்தின் மகள் சாந்தி என்பவரும் வசித்து வந்தார். 

இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது சகோதரி பாக்கியத்திடம் ரூ.4.5 லட்சத்தை மணி கடனாக வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகியும் பணத்தை திருப்பித்தராததால் அந்த பணத்தை திருப்பித்தருமாறு மணியிடம் பாக்கியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். 

இதனால் மனமுடைந்த அவர், கால் வலி மருந்து என்று கூறி தேனில் விஷ மாத்திரை கலந்து நேற்று காலை பாக்கியம் மற்றும் சாந்தி ஆகிய இருவருக்கும் கொடுத்துவிட்டு தானும் அந்த விஷத்தை அருந்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மூன்று பேரும் வீட்டில் மயங்கிக்கிடப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சாந்தி மற்றும் மணி பரிதாபமாக உயிரிழந்தனர். 

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாக்கியம் இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக, சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடன் பிரச்சனையால் சகோதரி மற்றும் அவரது மகளைக் கொலைசெய்துவிட்டு சகோதரரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...