சென்னை கால்பந்து கழகம்- நெரோகோ இடையேயான போட்டி டிராவில் நிறைவு

கோவை, ஜனவரி 10

கோவை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை கால்பந்து கழகம்- நெரோகோ அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.

ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 2017 நவம்பர் 25 ம் தேதியன்று துவங்கி வரும் 2018 மார்ச் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கிழக்கு வங்க கிங்பிஷர் அணி, மினர்வா பஞ்சாப் கால்பந்து கழகம், நெரோகோ கால்பந்து கழகம், ஷிலாங் லஜோங் கழக அணி, மோகன் பகன், ஆஸ்வால் கால்பந்து கழக அணி, சென்னை நகர கால்பந்து அணி, இந்தியன் ஏரோஸ், கோகுலம் கேரள கால்பந்து கழகம் மற்றும் கோவாவைச் சேர்ந்த சர்ச்சில் பிரதர்ஸ் அணி என இந்தியாவின் தலை சிறந்த 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

நேற்று (ஜன. 9) கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை கால்பந்து கழக அணியின் 9-வது போட்டியில் நெரோகோ அணியை எதிர்த்து விளையாடியது. துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோசத்துடன் விளையாடினர்.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சிறப்பான முறையில் பயன்படுத்தினர். தொடர்ந்து, இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அனல் பறக்கும் ஆட்டத்தை இரு அணி வீரர்களும் வெளிப்படுத்தினர்.

கோல் அடிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்தும் இரு அணியின் கோல் கீப்பர்கள் சிறப்பாக செயல்பட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சென்னை அணியின் கேப்டன் சூசைராஜா-விற்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் காசோலையினை வழங்கி கவுரவித்தனர். இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இந்தத் தொடர் முழுக்க சென்னை அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் கோவையிலேயே நடைபெறவுள்ளது. சென்னை கால்பந்தாட்ட கழக அணி தற்போது வரை 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 சமன், 4 தோல்வி என 9 புள்ளிகளுடன் உள்ளது. வரும் 20ம் தேதியன்று சென்னை அணிக்கும், கால்பந்தாட்டத்தில் புகழ்பெற்ற கேரள அணிக்கும் இடையே போட்டி நடைபெறவுள்ளதால் வழக்கத்தைவிட அன்று பார்வையாளர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...