திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் கவுரவிப்பு

திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

கோவை, ஜனவரி 9

திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்தி வரும் சீர்மிகு நகர திட்டங்கள் (ஸ்மார்ட் சிட்டி) மற்றும் அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று சென்னை குடிநீர் வாரிய கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



ஆய்வுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக, திரு. எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறந்து விளங்கிய மாநகராட்சிகளை ஊக்குவிக்கும் விதமாக கோவை மாநகராட்சி ஆணையாளர் கே.விஜயகார்த்திகேயன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் அனிஷ் சேகர், திருச்சி மாநகராட்சி ஆணையாளர் என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.



தமிழகத்திலுள்ள 11 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் 124 நகராட்சிகளில் தினந்தோறும் 7,585 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேரகமாகின்றது. இதில், மக்கும் குப்பைகள், மக்காத மற்றும் மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுகள் அனைத்தும் அடங்கும். திடக்கழிவு மேலாண்மையின் ஒரு அங்கமாக மக்கும் கழிவுகள் அனைத்தும் பரவலாக்கப்பட்ட நுண் உரமாக்கும் மையங்கள் மூலம் உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.  சேகரிக்கப்படும் மொத்த கழிவுகளில் சுமார் 2,000 மெட்ரிக் டன் மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுகளான பிளாஸ்டிக் கழிவுகள் வாரந்தோறும் சேகரிக்கப்பட்டு வந்தது. 

நகராட்சி நிர்வாக ஆணையரின் வழிகாட்டுதலுக்கிணங்க சேகரம் செய்யப்பட்ட மறுசுழற்சி பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் மொத்தக்கழிவு வியாபாரிகளிடம் விற்கப்பட்டு, அதன் வாயிலாகப் பெறப்படும் தொகையானது மாநகராட்சி / நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பிரித்தளிக்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் சுமார் 28,000 மெட்ரிக் டன் மறுசுழற்சி பிளாஸ்டிக் கழிவுகள் சேகரம் செய்து, ரூ.8.00 கோடி விற்கப்பட்டு, அத்தொகையானது 18,695 துப்புரவு பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி. பிரகாஷ் உடனிருந்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...