ஜெயலலிதா மரணம் விவகாரம்: விசாரணை ஆணையத்தில் உதவியாளர் பூங்குன்றன் ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, உதவியாளர் பூங்குன்றன் ஆஜரானார்.

ஜனவரி 9

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, உதவியாளர் பூங்குன்றன் ஆஜரானார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவகுமார், உதவியாளர் பூங்குன்றன், தனி பாதுகாவல் அதிகாரி பெருமாள்சாமி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் கடந்த வாரம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

ஜெயலலிதா கிசிச்சை தொடர்பான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு சசிகலா, சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன், அவரது ஆதரவாளர் வெற்றிவேல், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகளும், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவருமான பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 5 விடியோக்களை ஆணையத்திடம் தினகரனும், வெற்றிவேலும் சமர்ப்பித்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் சிவக்குமார் நேற்று ஆஜரான நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இன்று ஆஜரானார். ஏற்கனவே, ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வேலை பார்த்து வந்த 12 பேர்களின் முழு விவரத்தையும் விசாரணை ஆணையத்தில் பூங்குன்றன் வழங்கியிருந்தார். மேலும் சில தகவல்களை விசாரணை ஆணையம் கேட்டிருந்த நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்த பூங்குன்றன், விசாரணை ஆணையம் முன்பு இன்று நேரில் ஆஜரானார்.

ஜெயலலிதாவுக்கு நீண்ட காலமாக தனி பாதுகாவல் அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியை நாளையும், முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனை நாளை மறுநாளும், இதய நோய் சிகிச்சை மருத்துவர் சாமிநாதன் 12-ஆம் தேதியும் ஆஜராக உள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சத்யபாமாவுக்கு அண்மையில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த வாரம் ஆஜரானார். அவரிடம் காலை 10.30 மணி முதல் 1 மணி வரை விசாரணை நடைபெற்றது. அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருத்துவர்களின் விவரங்கள் குறித்துக் கேட்கப்பட்டன.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...