கோவை, ஜனவரி 08
திரையரங்கில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது.
திரையரங்கில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என கடந்த 2016ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. தேசிய கீதத்தை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், பல்வேறு இடங்களில் தேசிய கீதம் இசைப்பது குறித்து வரையறை செய்ய அமைச்சரவையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு வரையறை அமைக்க குறைந்தபட்சம் 6 மாத காலம் அவகாசம் தேவைப்படுகிறது. வரையறை தயாரானவுடன் மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிடும். அதுவரையில் திரையரங்கில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்கிற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திரையரங்கில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது.
திரையரங்கில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என கடந்த 2016ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. தேசிய கீதத்தை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், பல்வேறு இடங்களில் தேசிய கீதம் இசைப்பது குறித்து வரையறை செய்ய அமைச்சரவையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு வரையறை அமைக்க குறைந்தபட்சம் 6 மாத காலம் அவகாசம் தேவைப்படுகிறது. வரையறை தயாரானவுடன் மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிடும். அதுவரையில் திரையரங்கில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்கிற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.