மானிய விலையில் வீட்டுத் தோட்டக்காய்கறி விதை பாக்கெட்டுகள் வழங்குதல்

கோவை, ஜனவரி 08

தக்காளி, புடல், பாகல், பீர்க்கன் உள்ளிட்ட கீரை வகைகள் உள்ளிட்ட  வீட்டுத்தோட்ட விதைக் காய்கறி பாக்கெட்டுகள் கோவை மாவட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஊட்டச்சத்துள்ள உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்திட கிராம மற்றும் புறநகர் வீட்டுத் தோட்ட காய்கறி பயிரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு சிறப்பு முயற்சியாக வீட்டுத்தோட்ட காய்கறி விதைப் பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம் முதலமைச்சரால் கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. 

அதன்படி, நடப்பாண்டு ரூ. 20 மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் கத்தரி, தக்காளி, புடல், பாகல், பீர்க்கன், கீரை வகைகள், மிளகாய் மற்றும் கொத்தவரை ஆகிய காய்கறிகளில் ஏதேனும் ஐந்து காய்கறி விதைகள் அடங்கிய 22,000 விதைகாய்கறி பாக்கெட்டுகள்  கோவை மாவட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் 40 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.20 மதிப்புடைய ஒரு காய்கறி விதி பாக்கெட்டுக்கு அரசு மானியமாக ரூ. 8 வழங்கப்படுகிறது. பயனாளிகள் ரூ. 12 செலுத்தி விதைப்பாக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கென நடப்பாண்டில் கோவை மாவட்டத்திற்கு ரூ. 1,760 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஆறு காய்கறி விதைபாக்கெட்டுகள் வரை பெறலாம். இப்பாக்கெட்டுகளை கோவை மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் புறநகர்களில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் பெற்றுப் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...