கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களுக்கு 25,000 பேனாக்களை வழங்கிய ஜிஎம் பென்ஸ் நிறுவனம்

கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது


கோவை, ஜனவரி 08

கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது

நாடு முழுவதும் 1949-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் தேதி தியாகிகள் மற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக கொடிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, நன்கொடைகள் பெறப்பட்டு, அதன்மூலம் முன்னாள் ராணுவ வீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவிகள், தியாகிகளின் வாரிசுகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொடிநாளையொட்டி நன்கொடை பெறுவதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவித்து வருகிறார்.

தற்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 30-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது. இதற்கான, காசோலையை, ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் இந்திரக்குமார் மகேந்திரன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்தார். 

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...