கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது
கோவை, ஜனவரி 08
கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது
நாடு முழுவதும் 1949-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் தேதி தியாகிகள் மற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக கொடிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, நன்கொடைகள் பெறப்பட்டு, அதன்மூலம் முன்னாள் ராணுவ வீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவிகள், தியாகிகளின் வாரிசுகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொடிநாளையொட்டி நன்கொடை பெறுவதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவித்து வருகிறார்.
தற்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 30-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது. இதற்கான, காசோலையை, ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் இந்திரக்குமார் மகேந்திரன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்தார்.