82-வது வார்டில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி மாவட்ட ஆட்சிரிடம் மனு

கோவை மாநகராட்சியின் 82-வது வார்டு பகுதியில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 8

கோவை மாநகராட்சியின் 82-வது வார்டு பகுதியில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



கோவை மாநகராட்சிக்குட்பட்ட 82-வது வார்டு பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, அந்த வார்டின் மையப்பகுதியான கோட்டைமேடு, வின்சென்ட் ரோடு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, முறையான கழிப்பறை வசதியில்லாமல் பொதுமக்கள், திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டித் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

இந்த மனு குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் கழிப்பறை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 82-வது வார்டு பகுதியில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

”மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் கழிவறைகள் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாவட்டத்தில் சிறந்த மாநகராட்சி என்ற பெருமையை பெற்ற கோவை மாநகராட்சியில், இந்த நிலை இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை புரிந்து கொண்டு கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...