தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 12-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு

ஜனவரி 08,

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 12-ம் தேதிவரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், கரும்பு விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில், பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான மானிய உச்சவரம்பு உயர்வு, கச்சத்தீவு மீட்பு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 

ஆளுநர் உரை முடிந்ததும் இன்றைய கூட்டம் முடிந்தது. இதையடுத்து, சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.  

அப்போது, ஆளுநர் உரை மீது முதலமைச்சர் நன்றி தெரிவித்து பேசும் தினத்தில், எதிர்க்கட்சி தலைவரும் பேச அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. பின்னர், தொடர்ந்து நடந்த ஆலோசனையில் கூட்டத்தொடரை 12-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சபாநாயகர் தனபால் கூறியதாவது: சட்டப்பேரவை கூட்டத் தொடரை 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை (9-ம் தேதி) முதல் வியாழன் (11-ம் தேதி) வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து, 12-ம் தேதி முதலமைச்சர் உரை நிகழ்த்துவார். இவ்வாறு அவர் கூறினார்

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...