தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறுவது வேடிக்கையாக உள்ளது- கி. வீரமணி

தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும், இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை, ஜனவரி 8

தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும், இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை லட்சுமிமில் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் திராவிடர் கழகத்தின் கோவை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில், மத தீவிரவாதம், சாதி வெறி வளர்ந்து வரும் சூழலில் நாத்திகம் தான் மனிதநேயத்தை உருவாக்கும். தமிழ்நாட்டில் மட்டுமே நாத்திகர் இயக்கம் பெரியாரினால் மக்கள் இயக்கமாக உள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், மத்திய அரசு மண்டல கமிஷன் பரிந்துரைத்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றக்கோரியும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்.

ஆன்மீக அரசியல் என்பது சொல்பவர்களுக்கும் புரியாது, கேட்பவர்களுக்கும் புரியாது. ஆன்மீகம் என்பது சாமியார் வேலை. ஆட்சி நடத்துவது அரசியல்வாதிகள் வேலை. இரண்டிற்கும் தொடர்பு இல்லை. அரசியல்வாதிகள் நல்ல நடிகர்களாக இருந்திருக்கிறார்கள். நடிகர் நல்ல அரசியல்வாதிகளாக இருப்பார்களா ?. 

போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது. தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.

மேலும், போக்குவரத்துத் துறையினை தனியார்மயமாக்கலாம் என்ற நீதிமன்ற கருத்து குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு, அரசின் கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமையில்லை. நீதிமன்றத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்றார்.

தொடர்ந்து, ஆளுநர் உரை என்பது அமைச்சரவையில் தயாரிக்கப்பட்டது. தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா என கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...