கோவை, ஜனவரி 8
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், செல்வபுரம், குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிக அரசின் சீர்வரிசைகளை வழங்கினார்.
கோவை மாவட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.புரம், தொண்டாமுத்தூர், செல்வபுரம், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, கார்பிணி தாய்மார்களுக்கான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், மகப்பேறு காலங்களில் சத்தான உணவு உண்ணவும், விரும்பியதை பெறவும் ஏழை எளிய பெண்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.18 ஆயிரம் மகப்பேறு கால நிதியுதவி வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சீர்வரிசைகளுடன் சமுதாய வளைகாப்பு விழா, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம், இரு பெண்குழந்தைகள் நிதியுதவித்திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு
செயல்படுத்தி வருகிறது.
அதன்படி தற்போது சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசையுடன் 5 வகையான சத்தான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவரும் ஆரோக்கியமான குழந்தையினை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தினை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ச்ஜூணன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், செல்வபுரம், குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிக அரசின் சீர்வரிசைகளை வழங்கினார்.
கோவை மாவட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.புரம், தொண்டாமுத்தூர், செல்வபுரம், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, கார்பிணி தாய்மார்களுக்கான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், மகப்பேறு காலங்களில் சத்தான உணவு உண்ணவும், விரும்பியதை பெறவும் ஏழை எளிய பெண்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.18 ஆயிரம் மகப்பேறு கால நிதியுதவி வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சீர்வரிசைகளுடன் சமுதாய வளைகாப்பு விழா, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம், இரு பெண்குழந்தைகள் நிதியுதவித்திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு
செயல்படுத்தி வருகிறது.
அதன்படி தற்போது சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசையுடன் 5 வகையான சத்தான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவரும் ஆரோக்கியமான குழந்தையினை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தினை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ச்ஜூணன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.