கோவையில் தற்காலிக ஓட்டுனரால் விபத்து: அரசுப்பேருந்து மோதியதில் முதியவர் படுகாயம்

கோவையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய அரசுப் பேருந்து மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார்.

ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

90 சதவிகித ஓட்டுனர்கள் வேலைக்கு வராத காரணத்தால் அரசு பேருந்து சேவை முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பும் வரை தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

அதன்படி, கோவை மருதமலை பகுதியை சேர்ந்த இமய பாரதி என்ற தற்காலிக ஓட்டுனர் 76 இலக்கமிட்ட பேருந்தை இயக்கினர்.



காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை நோக்கிச் சென்ற அந்த பேருந்து சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த முதியவர் படுகாயமடைந்தார்.
இது தொடர்பாக வடவள்ளி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல், சென்னையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய பேருந்து மோதி வாலிபர் ஒருவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...