கோவையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய அரசுப் பேருந்து மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார்.
ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
90 சதவிகித ஓட்டுனர்கள் வேலைக்கு வராத காரணத்தால் அரசு பேருந்து சேவை முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பும் வரை தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
அதன்படி, கோவை மருதமலை பகுதியை சேர்ந்த இமய பாரதி என்ற தற்காலிக ஓட்டுனர் 76 இலக்கமிட்ட பேருந்தை இயக்கினர்.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை நோக்கிச் சென்ற அந்த பேருந்து சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த முதியவர் படுகாயமடைந்தார்.
இது தொடர்பாக வடவள்ளி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல், சென்னையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய பேருந்து மோதி வாலிபர் ஒருவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
90 சதவிகித ஓட்டுனர்கள் வேலைக்கு வராத காரணத்தால் அரசு பேருந்து சேவை முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பும் வரை தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
அதன்படி, கோவை மருதமலை பகுதியை சேர்ந்த இமய பாரதி என்ற தற்காலிக ஓட்டுனர் 76 இலக்கமிட்ட பேருந்தை இயக்கினர்.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை நோக்கிச் சென்ற அந்த பேருந்து சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த முதியவர் படுகாயமடைந்தார்.
இது தொடர்பாக வடவள்ளி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல், சென்னையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய பேருந்து மோதி வாலிபர் ஒருவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.