கோவையில் 15 வயது சிறுவன் மாயம்: போலீசார் விசாரணை

கோவையில் 10-ம் வகுப்பு பயிலும் சிறுவன் மாயமானதைத் தொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை, ஜனவரி 7

கோவையில் 10-ம் வகுப்பு பயிலும் சிறுவன் மாயமானதைத் தொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் கபிலேஷ் (15). வீரபாண்டிப்பிரிவு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்ற கபிலேஷ் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. 

இது தொடர்பாக சிறுவனின் தந்தை கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல மகன் பள்ளிக்குச் சென்றான். எப்போதும் பள்ளி முடிந்த பின் டியூசன் சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால், அன்று நெடுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.

பின் பள்ளி மற்றும் டியூசன் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டேன். அப்போது தான் கபிலேஷ் அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனது மகன் குறித்து தகவலறிந்தால் இந்த தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுங்கள் "9786343891" என்றார்.

சிறுவன் மாயமான விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...