கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை மற்றும் பட்டாம்பூச்சிகளைக் காண ஓர் நடைபயணம்

கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை ஆர்வலர்கள் மற்றும் பட்டாம்பூச்சி காதலர்கள் இன்று பல்வேறு இடங்களில் வண்ணமயமான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை கண்டறிந்து மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை, ஜனவரி 7

கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை ஆர்வலர்கள் மற்றும் பட்டாம்பூச்சி காதலர்கள் இன்று பல்வேறு இடங்களில் வண்ணமயமான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை கண்டறிந்து மகிழ்ச்சியடைந்தனர்.



மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாடிவயல் காடுகளில் பட்டாம்பூச்சிகளைக் காண நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 63 வகையான பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டது. மேலும், அருகில் உள்ள ஐந்து காட்டுப்பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. சின்னவேடப்பட்டி ஏரிக் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தில் 33 வகையான பறவைகள் காணப்பட்டன. இந்நிகழ்வில், பெற்றோர்களும், மாணவ, மாணவியர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.



இதுகுறித்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், பட்டாம்பூச்சி ஆர்வலர் மோகன்பிராசாத் கூறுகையில் சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து சிறுவாணி வரை பட்டாம்பூச்சிகளைக் காண பயணம் மேற்கொள்ளப்பட்டது.



சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் கிரிம்சன் ரோஸ், சவுத்தர்ன் டஃபர், இண்டிகோ ஃப்ளாஷ், மெனிடெய்ல் ஓக்புளூ மற்றும் பியர்ரோட் போன்ற பட்டாம்பூச்சி இனங்கள் காணப்பட்டன என்றார்.



முன்னதாக இதில், சின்னவேடப்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் மாணவ, மாணவியர்களை ஒருங்கிணைத்து ஏரிக் கரையோரத்தில் பயணம் மேற்கொண்டு அரியவகைப் பறவைகள் காண்பித்தனர்.



இந்நிகழ்வில், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு இயக்கத்தின் பி.கே.செல்வராஜ் பங்கேற்று பறவைகளை பார்வையிட்டார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...