கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை ஆர்வலர்கள் மற்றும் பட்டாம்பூச்சி காதலர்கள் இன்று பல்வேறு இடங்களில் வண்ணமயமான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை கண்டறிந்து மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை, ஜனவரி 7
கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை ஆர்வலர்கள் மற்றும் பட்டாம்பூச்சி காதலர்கள் இன்று பல்வேறு இடங்களில் வண்ணமயமான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை கண்டறிந்து மகிழ்ச்சியடைந்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாடிவயல் காடுகளில் பட்டாம்பூச்சிகளைக் காண நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 63 வகையான பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டது. மேலும், அருகில் உள்ள ஐந்து காட்டுப்பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. சின்னவேடப்பட்டி ஏரிக் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தில் 33 வகையான பறவைகள் காணப்பட்டன. இந்நிகழ்வில், பெற்றோர்களும், மாணவ, மாணவியர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதுகுறித்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், பட்டாம்பூச்சி ஆர்வலர் மோகன்பிராசாத் கூறுகையில் சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து சிறுவாணி வரை பட்டாம்பூச்சிகளைக் காண பயணம் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் கிரிம்சன் ரோஸ், சவுத்தர்ன் டஃபர், இண்டிகோ ஃப்ளாஷ், மெனிடெய்ல் ஓக்புளூ மற்றும் பியர்ரோட் போன்ற பட்டாம்பூச்சி இனங்கள் காணப்பட்டன என்றார்.

முன்னதாக இதில், சின்னவேடப்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் மாணவ, மாணவியர்களை ஒருங்கிணைத்து ஏரிக் கரையோரத்தில் பயணம் மேற்கொண்டு அரியவகைப் பறவைகள் காண்பித்தனர்.

இந்நிகழ்வில், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு இயக்கத்தின் பி.கே.செல்வராஜ் பங்கேற்று பறவைகளை பார்வையிட்டார்.
கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை ஆர்வலர்கள் மற்றும் பட்டாம்பூச்சி காதலர்கள் இன்று பல்வேறு இடங்களில் வண்ணமயமான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை கண்டறிந்து மகிழ்ச்சியடைந்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாடிவயல் காடுகளில் பட்டாம்பூச்சிகளைக் காண நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 63 வகையான பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டது. மேலும், அருகில் உள்ள ஐந்து காட்டுப்பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. சின்னவேடப்பட்டி ஏரிக் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தில் 33 வகையான பறவைகள் காணப்பட்டன. இந்நிகழ்வில், பெற்றோர்களும், மாணவ, மாணவியர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதுகுறித்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், பட்டாம்பூச்சி ஆர்வலர் மோகன்பிராசாத் கூறுகையில் சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து சிறுவாணி வரை பட்டாம்பூச்சிகளைக் காண பயணம் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் கிரிம்சன் ரோஸ், சவுத்தர்ன் டஃபர், இண்டிகோ ஃப்ளாஷ், மெனிடெய்ல் ஓக்புளூ மற்றும் பியர்ரோட் போன்ற பட்டாம்பூச்சி இனங்கள் காணப்பட்டன என்றார்.

முன்னதாக இதில், சின்னவேடப்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் மாணவ, மாணவியர்களை ஒருங்கிணைத்து ஏரிக் கரையோரத்தில் பயணம் மேற்கொண்டு அரியவகைப் பறவைகள் காண்பித்தனர்.

இந்நிகழ்வில், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு இயக்கத்தின் பி.கே.செல்வராஜ் பங்கேற்று பறவைகளை பார்வையிட்டார்.