கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை மற்றும் பட்டாம்பூச்சிகளைக் காண ஓர் நடைபயணம்

கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை ஆர்வலர்கள் மற்றும் பட்டாம்பூச்சி காதலர்கள் இன்று பல்வேறு இடங்களில் வண்ணமயமான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை கண்டறிந்து மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை, ஜனவரி 7

கோவை விழாவின் ஒரு பகுதியாக பறவை ஆர்வலர்கள் மற்றும் பட்டாம்பூச்சி காதலர்கள் இன்று பல்வேறு இடங்களில் வண்ணமயமான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளை கண்டறிந்து மகிழ்ச்சியடைந்தனர்.



மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாடிவயல் காடுகளில் பட்டாம்பூச்சிகளைக் காண நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 63 வகையான பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டது. மேலும், அருகில் உள்ள ஐந்து காட்டுப்பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. சின்னவேடப்பட்டி ஏரிக் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தில் 33 வகையான பறவைகள் காணப்பட்டன. இந்நிகழ்வில், பெற்றோர்களும், மாணவ, மாணவியர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.



இதுகுறித்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், பட்டாம்பூச்சி ஆர்வலர் மோகன்பிராசாத் கூறுகையில் சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து சிறுவாணி வரை பட்டாம்பூச்சிகளைக் காண பயணம் மேற்கொள்ளப்பட்டது.



சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் கிரிம்சன் ரோஸ், சவுத்தர்ன் டஃபர், இண்டிகோ ஃப்ளாஷ், மெனிடெய்ல் ஓக்புளூ மற்றும் பியர்ரோட் போன்ற பட்டாம்பூச்சி இனங்கள் காணப்பட்டன என்றார்.



முன்னதாக இதில், சின்னவேடப்பட்டி ஏரி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் மாணவ, மாணவியர்களை ஒருங்கிணைத்து ஏரிக் கரையோரத்தில் பயணம் மேற்கொண்டு அரியவகைப் பறவைகள் காண்பித்தனர்.



இந்நிகழ்வில், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு இயக்கத்தின் பி.கே.செல்வராஜ் பங்கேற்று பறவைகளை பார்வையிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...