கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு எ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம்


கோவை, ஜனவரி 05

தொழிலாளர்கள் பிரச்சனைகளை தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் அலட்சியப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய எ.ஐ.டி.யு.சி.யினர், கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொழிலாளர்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை தொழிலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு காணாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும், தமிழக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை ஏ.ஐ.டி.யு.சி.யினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், 480 நாட்கள் பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நலவாரியம் மற்றும் மாநில ஆலோசனை வாரியரங்களில் முத்தரப்பு குழு அமைக்க வேண்டும், வாரிய நிதிபலன் தொகையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசையும், தொழிலாளர் நலத்துறையையும் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...