கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு எ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம்


கோவை, ஜனவரி 05

தொழிலாளர்கள் பிரச்சனைகளை தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் அலட்சியப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய எ.ஐ.டி.யு.சி.யினர், கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொழிலாளர்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை தொழிலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு காணாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும், தமிழக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை ஏ.ஐ.டி.யு.சி.யினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், 480 நாட்கள் பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நலவாரியம் மற்றும் மாநில ஆலோசனை வாரியரங்களில் முத்தரப்பு குழு அமைக்க வேண்டும், வாரிய நிதிபலன் தொகையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசையும், தொழிலாளர் நலத்துறையையும் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...