கோவை, ஜனவரி 05
சுற்றுச்சூழல், நதிநீர், வனவிலங்கு, பாதுகாப்பு பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி கோவையில் சிறப்பு கருத்தரங்கம் கூட்டமைப்பு சார்பில் நடைபெறுகிறது.
கோவை மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கை நடந்து வருகிறது. சமீப காலமாக நகரத்திற்குள்ளேயே வனவிலங்குகள் வழிமாறி வந்து கொண்டிருக்கிறன. மத்திய, மாநில அரசுகளின் ஆசியோடு நடைபெறும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறன.
இதன் ஒருபகுதியாக கோவை வடவள்ளி மருதமலை அடிவாரத்தில் உள்ள பொதிகை மஹாலில் வரும் 7-ம் தேதி (ஞாயிறன்று) சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிநீர் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் சுபாஷினி அலி, உ. வாசுகி மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கோவை சதாசிவம், பியூஸ்மனுஸ், ஓசை காளிதாஸ் மற்றும் சமூக இயக்கங்களான மலைவாழ் மக்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் மாநில தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். காலை 9 மணிக்கு துவங்கும் இக்கருத்தரங்கம் மதியம் வரை நடைபெற உள்ளது.
சுற்றுச்சூழல், நதிநீர், வனவிலங்கு, பாதுகாப்பு பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி கோவையில் சிறப்பு கருத்தரங்கம் கூட்டமைப்பு சார்பில் நடைபெறுகிறது.
கோவை மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கை நடந்து வருகிறது. சமீப காலமாக நகரத்திற்குள்ளேயே வனவிலங்குகள் வழிமாறி வந்து கொண்டிருக்கிறன. மத்திய, மாநில அரசுகளின் ஆசியோடு நடைபெறும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறன.
இதன் ஒருபகுதியாக கோவை வடவள்ளி மருதமலை அடிவாரத்தில் உள்ள பொதிகை மஹாலில் வரும் 7-ம் தேதி (ஞாயிறன்று) சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிநீர் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் சுபாஷினி அலி, உ. வாசுகி மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கோவை சதாசிவம், பியூஸ்மனுஸ், ஓசை காளிதாஸ் மற்றும் சமூக இயக்கங்களான மலைவாழ் மக்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் மாநில தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். காலை 9 மணிக்கு துவங்கும் இக்கருத்தரங்கம் மதியம் வரை நடைபெற உள்ளது.