ப்ரோஷோன் மாலில் 3 நாள் நடக்கும் ”அங்காடி-18” மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடக்கம்

கோவை, ஜனவரி 05

இளைஞர்களிடையே தொழில் முனையும் ஆர்வத்தையும், திறமைகளையும் மேம்படுத்தும் நோக்கில் கோவை ப்ரோஷோன் மாலில் 3 நாள் நடக்கும் மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடங்கியது. 



 

கேசிடி மேலாண்மைத் துறை மாணவர்களால் அனைத்து தொழில் மேலாண்மையியல் மாணவர்களுக்காகவும் நடத்தப்படும் விற்பனைத் திருவிழாவே அங்காடி-18 ஆகும். இது இன்று முதல் 7-ம் தேதி வரையில் ஸ்வாரஸ்யமான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது பங்கேற்கும் மாணவர்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டும் தளமாகவும், சுயதொழில் செய்வதன் சாதக, பாதகங்களின் அனுபவ அறிவைப் பெற்று, அதன் மூலம் வியாபார யுக்திகளால் லாபம் ஈட்டும் களமாகவும் திகழும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

அங்காடி-18-ஆனது பல்வேறு உணவு வகைகள், சிறுவர்களுக்கான கேளிக்கை நிகழ்வுகள், திறன் கொணர் போட்டிகள், இயற்கை சார்ந்த பொருட்கள், உடைகள், அணி மணிகள், வீடு உபயோக பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என பலதரப்பட்டவற்றின் விற்பனை நிலையமாக 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இங்கு வெவ்வேறு பிஸினஸ் பள்ளி (BUSINESS SCHOOL)  மாணவர்கள் பங்கெடுப்பதால், அவர்கள் தங்களது வியாபார யுக்திகளை மேம்படுத்தவும், வெளிப்படுத்தவும் அங்காடி ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.

கேசிடி மேலாண்மைத் துறை என்பது குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் ஒரு அங்கமாகவும், சமூக அக்கறை கொண்ட தொழில் முனைவோர்களையும், முன்னோடிகளையும் உற்பத்தி செய்யும் மையமாகவும் திகழ்கிறது. இந்நாள்வரை குமரகுரு கல்லூரி வளாகத்திற்குள்ளாகவே நடைபெற்ற அங்காடி நிகழ்வானது, முதன்முறையாக கல்லூரிகளுக்கிடைப்பட்ட நிகழ்வாக, பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கோவை ப்ரோஷோன் மாலில் நடைபெற உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக அங்கேயே பெரிய அளவில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வெவ்வேறு விதமான 75 விற்பனையகங்கள் மூலம் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு, தொழில் முனையத் தேவையான திறன்களை ஊட்டி, வியாபார நேர்த்திகளைக் கற்பிப்பதே அங்காடி-18ன் சீரிய நோக்கமாகும்.

இந்த மாபெரும் விற்பனைத் திருவிழாவானது மூன்று நாட்களிலும் காலை 11 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரையிலும் நடைபெறும். அனுமதி அனைவருக்கும் இலவசம். இந்நிகழ்வை வருகையாளர்களுக்கு என்றென்றும் பசுமையான நினைவாக்கும் வகையில், அங்காடியானது, கோவை விழா அமைப்போடு கைகோர்த்து செயலாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...