நீலகிரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் : பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி, ஜனவரி 05

நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 



போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ‌தோல்வியி்ல் முடிந்ததால், நேற்று மாலை முதலே த‌மிழகம் முழுவதும் பெரும்பாபலான பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையி்ல், நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர், கோத்தகிரி, கூடலுார் பகுதியில் நேற்று மாலையில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தாங்கள் செல்லவிருந்த பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். 

இந்த நிலையில், இன்று காலை முதலே குன்னுார், உதகை, கோத்தகிரி, கூடலுார் பணிமனையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் வெளியே எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகள் கிராமப் பகுதிக்கு செல்லும் ஆதிவாசி மக்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள் தேர்வு ‌எழுத முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 

மேலும், போக்குவரத்து ஊழியர்கள் ஒரே இடத்தில் குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் பேருந்த நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிக்கு பேருந்து கிடைக்காததால் மாணவ, மாணவிகள் திரும்பி வீட்டிற்கு சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...